Sunday, 7 September 2025

ஸ்ரீகுமரகுருபரரும் உ.வே.சா-வும்

 உ.வே.சா வின் ‘’என் சரிதம்’’ நூலில் திருவாவடுதுறை மடத்தில் நிகழும் பட்டினப் பிரவேசம் குறித்து விவரிக்கப்படுகையில் ஐயர் திருவாவடுதுறையை ‘’சிவ ராஜதானி’’ என்று குறிப்பிடுவார். எனக்கு அந்த சொல் மிகுந்த ஆர்வம் அளித்தது. அந்த சொல் என் மனதில் மிகவும் தங்கியிருந்தது. இன்று ஸ்ரீகுமரகுருபரரின் ‘’மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’’ என்னும் நூலினை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஸ்ரீகுமரகுருபரர் மீனாட்சியம்மையும் சொக்கநாதப் பெருமானும் வாசம் புரியும் மதுரையை ‘’சிவ ராசதானி’’ எனச் சிறப்பித்துக் கூறுகிறார். ஐயர் அவர்கள் உளத்தில் குமரகுருபரரின் சொல் பதிந்திருந்ததால் திருவாவடுதுறை குறித்த அவரது சித்தரிப்பில் அச்சொல் வெளிப்பட்டிருக்கிறது என எண்ணினேன்.