நேற்று மாலை அந்தியில் குடவாயில் கோணேசர் ஆலயம் சென்று வழிபட்டேன். மாடக் கோயில் வகையிலானது. இந்த ஆலயத்தின் ஆடலரசனின் செப்புத் திருமேனி எழிலார்ந்தது. கருவறையில் வீற்றிருக்கும் சிவலிங்கம் அகத்தை உருகச் செய்வது. அந்திப் பொழுதில் சென்றிருந்த போது ஆலயம் உள்ளிருக்கும் நேரமெல்லாம் ஒலித்துக் கொண்டிருந்த ஆலய இசைக்கலைஞர்களின் மங்கள இசை மனதுக்கு இனிமையாக இருந்தது.