அமைதியை
துல்லியமாக நேர்த்தியாக
உணர வேண்டியிருக்கிறது
துல்லியமான அமைதி
நேர்த்தியான அமைதி
இனிய அமைதி
அமைதி நிறைந்திருக்கும் பொழுதுகள்
அமைதி நிறைந்திருக்கும் நாட்கள்
அமைதி நிறைந்திருக்கும் பிரதேசங்கள்
இவற்றில் தான்
இருத்தல்
அத்தனை இனிதாக அமர்கிறது
இருத்தல் இனிதாகையில்
இருப்பு
கரைந்து போகிறது
அத்தனை இனிமையுடன்