Saturday, 10 January 2026

அலைகடல்

 இங்கே இன்று காலையிலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்தது. பெருமழை பெய்யக்கூடும் என ஓர் எதிர்பார்ப்பு நிலவியது. மாலை 3 மணிக்கு தரங்கம்பாடி நோக்கி புறப்பட்டேன். செம்பொன்னார்கோவிலிலிருந்து இலேசாக தூறத் தொடங்கியிருந்தது. தரங்கம்பாடியில் அலைகடல் முன் சென்று நின்றேன். அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. அலையோசை நிரம்பியிருந்தது அகமும் புறமும்.