Wednesday, 30 June 2021

14

 உன்னை
மலர்கள் அறியும்
உன்னை
இறைமை அறியும்

Tuesday, 29 June 2021

15

 நீ
சூடிக் கொள்ளும்
மலரும்
மலர்களும்
உன்னிடம்
அத்தனை இயல்பாக
பொருந்திக் கொள்வது
எதனால்?

Monday, 28 June 2021

16

 மலரை அர்ப்பணிக்கிறேன்
மலரிடம் 
அர்ப்பணம் ஆகிறேன்

Sunday, 27 June 2021

17

 மலரின்
மகரந்தத்திலும்
வீற்றிருக்கிறது
இறைமை

Saturday, 26 June 2021

18

 ஒரு மலர்
பலவற்றை
உணர்த்துகிறது
மலர்தலையும்

Friday, 25 June 2021

19

தம்பூராவின் சுருதியில்
நாத ஸ்வர இசையில்
வீணையின் நரம்பொன்றின் அதிர்வில்
இசை பயிலும் மகவொன்றின்
குரலிசையில்
பாயும் போது
மலர்கிறாள்
காவேரி

Thursday, 24 June 2021

20

தவத்தில் சுடர்ந்த
ஒரு முனிவன்
குறுமுனிவன்
அவன்
கமண்டல நீராய்
மலர்ந்திருந்தது
யோகம்

அந்த மலர்
பரவியது
நிலத்தில்
கலையென
இசையென
காவிரி
என

Wednesday, 23 June 2021

21


நீ
உணர்ந்த கடவுளை
உணர்கிறேன்
நறு மணமாய்
நிறையும்
உன் இசை
மூலம்

Tuesday, 22 June 2021

22

 ஒரு மலர்
வான் நோக்குவது
போல
உன் குரல்
உன் இசை
மேலெழுகிறது
இறைமையை
நோக்கி


Monday, 21 June 2021

23


புல்லும்
ஒரு மலரென
புரியத் தொடங்குவது
எப்போது