பிரபு மயிலாடுதுறை
Wednesday, 30 June 2021
14
உன்னை
மலர்கள் அறியும்
உன்னை
இறைமை அறியும்
Tuesday, 29 June 2021
15
நீ
சூடிக் கொள்ளும்
மலரும்
மலர்களும்
உன்னிடம்
அத்தனை இயல்பாக
பொருந்திக் கொள்வது
எதனால்?
Monday, 28 June 2021
16
மலரை அர்ப்பணிக்கிறேன்
மலரிடம்
அர்ப்பணம் ஆகிறேன்
Sunday, 27 June 2021
17
மலரின்
மகரந்தத்திலும்
வீற்றிருக்கிறது
இறைமை
Saturday, 26 June 2021
18
ஒரு மலர்
பலவற்றை
உணர்த்துகிறது
மலர்தலையும்
Friday, 25 June 2021
19
தம்பூராவின் சுருதியில்
நாத ஸ்வர இசையில்
வீணையின் நரம்பொன்றின் அதிர்வில்
இசை பயிலும் மகவொன்றின்
குரலிசையில்
பாயும் போது
மலர்கிறாள்
காவேரி
Thursday, 24 June 2021
20
தவத்தில் சுடர்ந்த
ஒரு முனிவன்
குறுமுனிவன்
அவன்
கமண்டல நீராய்
மலர்ந்திருந்தது
யோகம்
அந்த மலர்
பரவியது
நிலத்தில்
கலையென
இசையென
காவிரி
என
Wednesday, 23 June 2021
21
நீ
உணர்ந்த கடவுளை
உணர்கிறேன்
நறு மணமாய்
நிறையும்
உன் இசை
மூலம்
Tuesday, 22 June 2021
22
ஒரு மலர்
வான் நோக்குவது
போல
உன் குரல்
உன் இசை
மேலெழுகிறது
இறைமையை
நோக்கி
Monday, 21 June 2021
23
புல்லும்
ஒரு மலரென
புரியத் தொடங்குவது
எப்போது
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)