Thursday, 21 February 2019

கிருஷ்ண முரளி - 13

உறங்காது விழித்திருக்கிறேன் இந்த இரவில்
குளிர்ச்சி பொங்கும் நிலவு தனித்திருக்கிறது
வானெங்கும் நிரம்புகிறது பால் வெண்மை
துடிக்கும் இதயம் உனது பெயர் சொல்கிறது
உன் உள்ளங்கைகளின் தீண்டல் உயிர் கொள்கிறது
ஒவ்வொரு கணமும்
உன் புல்லாங்குழலை நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறேன்
இந்த உலகில் வேறு ஏதும் இல்லை என