Saturday 9 February 2019

மீண்டும் ஒரு வசந்தகாலம்

மீண்டும் மலர இருக்கிறது
ஒரு வசந்த காலம்
மேகங்கள் ஏதுமற்ற வானம்
துல்லிய நீலம் கொண்டு
மனதைப் பித்தேறச் செய்யும்
பருவம்
மண்ணில் பரவும்
துயர வேர் முடிச்சுகள்
நீரின் சாரம் சேகரித்து
மலர்களின் இனிமையை
பூக்கச் செய்யும்
காலம்
பேரெழில்
துயர் விடுக
துயர் விடுக
என
எழுப்பும்
மென் இசை சங்கீதம்
ஒலிக்க இருக்கிறது
மலர்க
சேற்றிலிருந்து செந்தாமரைகள் என
மலர்க
அல்லி மலர்களென
மலர்க
தீ ஒளிரும் பசும் தளிர்களென