மீண்டும் மலர இருக்கிறது
ஒரு வசந்த காலம்
மேகங்கள் ஏதுமற்ற வானம்
துல்லிய நீலம் கொண்டு
மனதைப் பித்தேறச் செய்யும்
பருவம்
மண்ணில் பரவும்
துயர வேர் முடிச்சுகள்
நீரின் சாரம் சேகரித்து
மலர்களின் இனிமையை
பூக்கச் செய்யும்
காலம்
பேரெழில்
துயர் விடுக
துயர் விடுக
என
எழுப்பும்
மென் இசை சங்கீதம்
ஒலிக்க இருக்கிறது
மலர்க
சேற்றிலிருந்து செந்தாமரைகள் என
மலர்க
அல்லி மலர்களென
மலர்க
தீ ஒளிரும் பசும் தளிர்களென
ஒரு வசந்த காலம்
மேகங்கள் ஏதுமற்ற வானம்
துல்லிய நீலம் கொண்டு
மனதைப் பித்தேறச் செய்யும்
பருவம்
மண்ணில் பரவும்
துயர வேர் முடிச்சுகள்
நீரின் சாரம் சேகரித்து
மலர்களின் இனிமையை
பூக்கச் செய்யும்
காலம்
பேரெழில்
துயர் விடுக
துயர் விடுக
என
எழுப்பும்
மென் இசை சங்கீதம்
ஒலிக்க இருக்கிறது
மலர்க
சேற்றிலிருந்து செந்தாமரைகள் என
மலர்க
அல்லி மலர்களென
மலர்க
தீ ஒளிரும் பசும் தளிர்களென