Monday 18 March 2019

அனந்தம்

அலைந்து
அமர்ந்திருந்த போது
மூடியிருந்த
என் கண்களிலிருந்து
நீர் கசிந்து கொண்டிருந்தது
எப்போதோ
நான் ஒரு குழந்தையாய்
ஓடிக்கொண்டிருந்தேன்
என்னை அழைத்த
ஒரு குரல் கேட்டேன்
நட்சத்திர வானம்
இரவுப் பொழுதொன்றில்
பார்த்துக் கொண்டிருந்தேன்
தேம்பித் தேம்பி
என்றோ
அழுத நாள்
ஞாபகங்கள்
மெல்ல நகர்ந்தன
ஒரு முகம்
இன்னொரு முகம்
மேலும் ஒரு முகம்
இன்னுமொரு முகம்
முகங்கள் என்னைப் பார்த்தன
என்னிடம் கண்ணீர் இருக்கிறது
என்னிடம்
கண்ணீர் மட்டும் இருக்கிறது
ஓய்ந்த பொழுதொன்றில்
ஓர் ஒலி கேட்டேன்
ஒற்றை ஒலி
எல்லாமாயிருந்த
ஓர் ஒலி