Monday, 18 March 2019

நிலவு
கண்டதும்
ஆர்ப்பரிக்கின்றன
அலைகள்

மழை
தீண்டியதும்
உயிராய்
வளர்ந்து
எழுகிறது
மண்

தொங்கிக் கொண்டிருக்கும்
ஒற்றைத் தண்டவாள
பள்ளி மணியோசைக்கு
குதித்து வெளியேறுகின்றன
ஆரம்பப் பள்ளி குழந்தைகள்

குளத்தில் இறங்குபவனின்
கால்களைக் கடிக்கின்றன
கருநிற மீன்கள்

மௌனமான இரவில்
அமர்ந்திருக்கிறேன்
நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்தவாறு