Thursday 28 March 2019

ஆழித்தேர்

தீ யென
வான் நோக்கி எழுந்துள்ளது
ஆழித்தேர்
தியாகராஜர்
கிளம்பி வந்திருக்கிறார்
நகர் பார்க்க
ஜனம் பார்க்க
சுற்றிலும்
மறை ஒலிக்க
தேவாரம் கேட்க
நாகஸ்வரம் இசைக்க
மாலை அந்தியில்
தேரின் கீழ்
குழுமி நிற்கின்றனர்
ஆயிரம் மானுடர்
எப்போதும்
கோபுரத்தில் தங்கும் புறாக்கள்
உற்சாகமாய் சுற்றி சுற்றி
அமர்ந்து கொண்டன
தேரின் மேல்
சங்கொலி கேட்கத் துவங்குகிறது
அவ்வொலியில் காட்சியாகிறது
ஆயிரம் ஆண்டுகள்