Thursday 28 March 2019

துவாரபாலகர்கள்

ஏக முத்திரை காட்டி
நின்றிருக்கின்றனர்
துவாரபாலகர்கள்
பெரிய
மிகப் பெரிய
உருவத்துடன்
பெருமாள் சயனித்திருக்கிறார்
பட்டர் வீட்டுக்குச் சென்றிருக்கும் போது
பூட்டிய
கதவுக்கு முன்னால் அமர்கின்றனர்
சாமி கும்பிட வந்தவர்கள்
காத்திருக்கும் அவகாசத்தில்
கவனிக்கின்றனர்
துவாரபாலகர்களை
கதவு எப்போது திறக்கும்
என்ற கேள்வி மனதில்
உள்ளேயிருப்பவனுக்கு
எல்லாம் தெரியும்
என்ற ஒரே பதில்
மட்டும்
எப்போதும்
இருக்கிறது
துவாரபாலகர்களிடம்