Monday 18 March 2019

என்னிடம் ஏதேனும் கேள்
என்றேன்
நீ
என் துயரங்களை
என் வலிகளை
இன்னும் மறக்காத கசப்புகளை
தந்துவிடும்படி
சொன்னாய்

கலங்கிய முகத்துடன்
அவை உன்னைத் துன்புறுத்தும்
என
அவசர அவசரமாய் மறுத்தேன்

நீ
மாசற்ற முகத்துடன்
மலர்கள்
எங்கிருப்பினும்
மணம் வீசும்
என்றாய்