Sunday 21 April 2019

உயிர் ஒளி

ஒரு வரைபடத் தாளில்
ஓரிடத்தில்
அதை அடி என்பதா
அதை முடி என்பதா
என இப்போது சொல்ல முடியாத
ஓரிடத்தில்
பல வண்ணம் கலந்த
ஒரு புள்ளியை இடுகிறேன்
பின்னர்
அவை எங்கும் நீண்டன
பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன்
நீளும் வழி தோறும்
அதன் ஒரு கை ஆழ்கடலில் துழாவியது
பாதத் தடங்கள் வானில் பதிந்தன
உச்சி மலைகளை நோக்கி உடல் நகர்த்தியது
விடாய் தீர குருதி கேட்டது
புலிக்குருளைகளின் கர்ப்ப ஈரமாய் பிசுபிசுத்தது
உலகெங்கும் உதிரும் கண்ணீர்த்துளிகளின் உப்பானது
மண்ணிலிருந்து பசும் தளிராய் முளைத்தது

என் திருப்திக்கு
அதற்கு
உன் பெயரை
இட்டுக் கொண்டேன்