முன்காலையிலேயே
கோடை அனல்
பற்றத் துவங்கியிருக்கிறது
அந்தக் கிராமத்தில்
காயும் வெயிலின்
அதிகாரம்
நீர்த்தாகமாய்
நிறைகிறது உயிர்களிடம்
ஈரமற்ற குளத்தின் கரையில்
பேரால மரங்கள் மூன்று
அதன் கிளையில்
இடைவிடாது சலம்புகின்றன
சிறு புள்ளினங்கள்
மேகமற்ற வானத்திடம்
யாவர்க்கும்
நீர் கேட்டு
யாசிக்கிறான்
எதையோ
தேடி வந்த ஒருவன்
கோடை அனல்
பற்றத் துவங்கியிருக்கிறது
அந்தக் கிராமத்தில்
காயும் வெயிலின்
அதிகாரம்
நீர்த்தாகமாய்
நிறைகிறது உயிர்களிடம்
ஈரமற்ற குளத்தின் கரையில்
பேரால மரங்கள் மூன்று
அதன் கிளையில்
இடைவிடாது சலம்புகின்றன
சிறு புள்ளினங்கள்
மேகமற்ற வானத்திடம்
யாவர்க்கும்
நீர் கேட்டு
யாசிக்கிறான்
எதையோ
தேடி வந்த ஒருவன்