Thursday, 16 May 2019

மழை இரை

முன்காலையிலேயே
கோடை  அனல்
பற்றத் துவங்கியிருக்கிறது
அந்தக் கிராமத்தில்
காயும் வெயிலின்
அதிகாரம்
நீர்த்தாகமாய்
நிறைகிறது உயிர்களிடம்
ஈரமற்ற குளத்தின் கரையில்
பேரால மரங்கள் மூன்று
அதன் கிளையில்
இடைவிடாது சலம்புகின்றன
சிறு புள்ளினங்கள்
மேகமற்ற வானத்திடம்
யாவர்க்கும்
நீர் கேட்டு
யாசிக்கிறான்
எதையோ
தேடி வந்த ஒருவன்