Wednesday 15 May 2019

ஆக்கம்

இந்த வாழ்க்கை நாடகத்தில்
நாடக மேடைகள்
காட்சி முடிந்த பின்னர்
வெறிச்சோடி இருக்கின்றன
ஒப்பனை அறைகள் கலைந்து போயின
நடிகர்கள் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்
அன்னையுடன் வந்திருந்த சிறுவன்
நினைவில் நீங்காமல் இருந்த ஒரு வசனத்தை
உறங்கச் செல்லும் முன்
மெல்ல
சொல்லிப் பார்க்கிறான்
எங்கெங்கோ தொடங்குகின்றன ஒத்திகைகள்