Tuesday, 21 May 2019

மர்ஃபியின் அன்பு

மர்ஃபி சிறுகை அளாவிய பண்டங்களை
எப்போதும்
பகிர்ந்து கொடுப்பான்
சிறு குழந்தையாய் இருந்ததிலிருந்தே
அவன் நெகிழும் மென்குரலில்
பிரியமாய் அழைப்பான்
அவனது ஒவ்வொரு அழைப்புக்கும்
வானில் ஒரு மீன் கண்சிமிட்டும்
ஓடி விளையாடி மூச்சிறைக்கும் போது
புதிதாய் பூக்கும் சிறுமலர்கள்
அவன் மகிழும் தருணம்
ஒவ்வொன்றிலும்
கடவுள் நிம்மதியடைகிறார்
இந்த உலகு பற்றி