Monday 20 May 2019

கதை ஆனது

அதாவது
கதை என்ன ஆனது என்றால்
எல்லாரும் எதிர்பார்த்த
எல்லார் கவனமும் கூரான
இடம்
எல்லார் ஞாபகத்திலும் இருந்தது
ஆனால்
கதாபாத்திரங்கள்
கதையில் அந்த இடத்தை
தன் போக்குக்கு
மாற்றியமைத்துப் பார்த்தனர்
எங்கேயோயிருந்த வெட்டவெளி
இங்கே வந்து சேர்ந்தது
மேய புல் தேடிய சில ஆட்டுக்குட்டிகள்
சுவாரசியமில்லாமல் கடந்து சென்றன
களத்துமேட்டில் பல நாளாக நின்ற டிராக்டரை
இழுத்து வந்து போட்டனர்
சட்டெனக் கூடிய ஒரு கும்பல் வாய்ச்சண்டையில் இறங்கியது
சுவாரசியமாகக் கதை கேட்டவர்கள்
கதை என்ன ஆனது
கதை என்ன ஆனது
என்றனர்
நான் தான் சொல்கிறேனே
என்றான்
வெட்டவெளியின் கதை சொல்லும்
கதைசொல்லி