Monday 6 May 2019

அவள்

அவள் ஒரு மலர்
அவ்வப்போது வான் நோக்குவாள்
அப்போது
ஒளி மிக்க வேறொரு
மலராவாள்
மென்மையாய்ப் புன்னகைக்கும் போது
ஒரு மலர்க்கொத்து
என்றாவாள்
அவள் கருணை வெளிப்படும்
கணங்களிலெல்லாம்
அபூர்வ மணம் கொள்வாள்
அவள் நீங்கிச் சென்ற பின்னும்
நீங்காமல் இருக்கும்
அந்த மணம்
அவள் எப்போதாவது சிந்தும்
விழிநீர்
புல்வெளிகளுக்கு இடையே
பூத்திருக்கும்
சிறுமலர்களாய்