அவள் ஒரு மலர்
அவ்வப்போது வான் நோக்குவாள்
அப்போது
ஒளி மிக்க வேறொரு
மலராவாள்
மென்மையாய்ப் புன்னகைக்கும் போது
ஒரு மலர்க்கொத்து
என்றாவாள்
அவள் கருணை வெளிப்படும்
கணங்களிலெல்லாம்
அபூர்வ மணம் கொள்வாள்
அவள் நீங்கிச் சென்ற பின்னும்
நீங்காமல் இருக்கும்
அந்த மணம்
அவள் எப்போதாவது சிந்தும்
விழிநீர்
புல்வெளிகளுக்கு இடையே
பூத்திருக்கும்
சிறுமலர்களாய்
அவ்வப்போது வான் நோக்குவாள்
அப்போது
ஒளி மிக்க வேறொரு
மலராவாள்
மென்மையாய்ப் புன்னகைக்கும் போது
ஒரு மலர்க்கொத்து
என்றாவாள்
அவள் கருணை வெளிப்படும்
கணங்களிலெல்லாம்
அபூர்வ மணம் கொள்வாள்
அவள் நீங்கிச் சென்ற பின்னும்
நீங்காமல் இருக்கும்
அந்த மணம்
அவள் எப்போதாவது சிந்தும்
விழிநீர்
புல்வெளிகளுக்கு இடையே
பூத்திருக்கும்
சிறுமலர்களாய்