Tuesday, 28 May 2019

கண்ணீர் சிந்தும் போது

ஒரு துக்கத்தில்
ஒரு வேதனையில்
ஒரு கசப்பில்
கண்ணீர் சிந்தும் போது
பால்ய நினைவுகள்
தொடர்பில்லாமல் வருகின்றன
பிரியம் காட்டிய சிலரின் குரல் கேட்கிறது
எப்போதோ
இறந்து போனவர்கள் முகத்தை
கடைசியாகப் பார்த்த
நினைவு
இதோ
வந்து விடுகிறேன்
என்று
தனியாக விடப்பட்ட
யாருமற்ற இடத்தில்
ரொம்ப நேரமாய்
காத்திருந்தது
ஞாபகம் வருகிறது