Monday 27 May 2019

தனித்திருப்பவர்கள்

தனித்திருப்பவர்கள்
சொல்ல விரும்பும் சில சொற்களை
மீண்டும் மீண்டும்
சொல்லிப் பார்த்துக் கொள்கின்றனர்
அவை
சொல்லப்படுவதற்கான
சந்தர்ப்பம்
வராமலே போகக் கூடும்
என்பதை
உள்ளூற மனதில் அறிந்திருந்தாலும்
எஞ்சும் ஒரு நம்பிக்கையை
வெறுமனே பார்க்கிறார்கள்
எஞ்சிய நம்பிக்கை
அவர்களை
நூதனமாக்குகிறது
தனித்திருப்பவர்கள்
கண்ணீர் சிந்த விரும்புகிறார்கள்
அவர்கள்
கண்ணீருக்குப் பின்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
இந்த பூமியின் பாரம்
அவர்கள் தோளில்
இன்னும் கூடுகிறது