தனித்திருப்பவர்கள்
சொல்ல விரும்பும் சில சொற்களை
மீண்டும் மீண்டும்
சொல்லிப் பார்த்துக் கொள்கின்றனர்
அவை
சொல்லப்படுவதற்கான
சந்தர்ப்பம்
வராமலே போகக் கூடும்
என்பதை
உள்ளூற மனதில் அறிந்திருந்தாலும்
எஞ்சும் ஒரு நம்பிக்கையை
வெறுமனே பார்க்கிறார்கள்
எஞ்சிய நம்பிக்கை
அவர்களை
நூதனமாக்குகிறது
தனித்திருப்பவர்கள்
கண்ணீர் சிந்த விரும்புகிறார்கள்
அவர்கள்
கண்ணீருக்குப் பின்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
இந்த பூமியின் பாரம்
அவர்கள் தோளில்
இன்னும் கூடுகிறது
சொல்ல விரும்பும் சில சொற்களை
மீண்டும் மீண்டும்
சொல்லிப் பார்த்துக் கொள்கின்றனர்
அவை
சொல்லப்படுவதற்கான
சந்தர்ப்பம்
வராமலே போகக் கூடும்
என்பதை
உள்ளூற மனதில் அறிந்திருந்தாலும்
எஞ்சும் ஒரு நம்பிக்கையை
வெறுமனே பார்க்கிறார்கள்
எஞ்சிய நம்பிக்கை
அவர்களை
நூதனமாக்குகிறது
தனித்திருப்பவர்கள்
கண்ணீர் சிந்த விரும்புகிறார்கள்
அவர்கள்
கண்ணீருக்குப் பின்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
இந்த பூமியின் பாரம்
அவர்கள் தோளில்
இன்னும் கூடுகிறது