ஆற்று மணலில்
கதைகேட்டு நடந்தவன்
எதிரே
ஒரு கரை இருந்தது
பின்னால்
அவன் இறங்கி வந்த கரை
ஆற்றின் பெரும்பாதி மணல்
ஆற்றின் சிறுபாதி ஓட்டம்
பாட்டி இரவின் கதையை
உச்சிவெயிலில் சொல்கிறாள்
ஐயனார் குதிரையில் வந்த கதை
அனுமன் லங்கை போன கதை
பெண்ணின் கண்ணீரை தெய்வம் சகியாது
பாட்டி உறுதியாய் சொல்கிறாள்
ஐயனாரின் குதிரை அவ்வப்போது கனைப்பது
கேட்கிறது கதை கேட்டு நடப்பவனுக்கு
சில அழுகுரல்களும்
கதைகேட்டு நடந்தவன்
எதிரே
ஒரு கரை இருந்தது
பின்னால்
அவன் இறங்கி வந்த கரை
ஆற்றின் பெரும்பாதி மணல்
ஆற்றின் சிறுபாதி ஓட்டம்
பாட்டி இரவின் கதையை
உச்சிவெயிலில் சொல்கிறாள்
ஐயனார் குதிரையில் வந்த கதை
அனுமன் லங்கை போன கதை
பெண்ணின் கண்ணீரை தெய்வம் சகியாது
பாட்டி உறுதியாய் சொல்கிறாள்
ஐயனாரின் குதிரை அவ்வப்போது கனைப்பது
கேட்கிறது கதை கேட்டு நடப்பவனுக்கு
சில அழுகுரல்களும்