Tuesday, 21 May 2019

குரல்

ஆற்று மணலில்
கதைகேட்டு நடந்தவன்
எதிரே
ஒரு கரை இருந்தது
பின்னால்
அவன் இறங்கி வந்த கரை
ஆற்றின் பெரும்பாதி மணல்
ஆற்றின் சிறுபாதி ஓட்டம்
பாட்டி இரவின் கதையை
உச்சிவெயிலில் சொல்கிறாள்
ஐயனார் குதிரையில் வந்த கதை
அனுமன் லங்கை போன கதை
பெண்ணின் கண்ணீரை தெய்வம் சகியாது
பாட்டி உறுதியாய் சொல்கிறாள்
ஐயனாரின் குதிரை அவ்வப்போது கனைப்பது
கேட்கிறது கதை கேட்டு நடப்பவனுக்கு
சில அழுகுரல்களும்