Sunday 30 June 2019

புத்தகமும் கையும்

கைகளுக்கு அழகு எது? ஓர் இலக்கிய வாசகன் புத்தகத்தை ஏந்தி வாசித்திருத்தல் என்றே சொல்லுவான். வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள் ஒரு புத்தகத்தை ஏந்துவதற்கும் மற்றவர்கள் ஏந்துவதற்குமே வித்யாசம் உண்டு. வாசிப்பில் ஆர்வம் உள்ளவனுக்கு புத்தகம் வசப்படுகிறது. அதன் மூலம் அவனுக்கு வாழ்க்கையே வசப்படுகிறது. நான் சிறுவயதில் எப்போதும் புத்தகமும் கையுமாகவே இருப்பேன். பெரிய நூலகங்களைப் பற்றி வாசிக்கும் போது இந்த உலகின் எல்லா புத்தகங்களையும் வாசித்து விட முடியுமா என்று தோன்றும். உலகின் எல்லா புத்தகங்களையும் எவராலும் வாசித்திட முடியாது. ஆனால் நமக்கு ஆர்வம் இருக்கும் துறைகளின் முக்கியமான புத்தகங்களை வாசித்திட முடியும். புத்தகம் மூலம் ஆசான்கள் நம்முடன் உரையாடுகின்றனர். விவாதிக்கின்றனர். வழிகாட்டுகின்றனர். அது எவ்வளவு பெரிய பேறு! இன்னும் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்த ஏக்கம் எனக்கு இப்போதும் இருக்கிறது. மடிக்கணினியில் எழுதினாலும் இப்போதும் அச்சுப் புத்தகங்களையே அதிகம் வாசிக்கிறேன். சமீபத்தில் கிண்டில் பாதி. புத்தகம் பாதி.