அரசமர விநாயகர் முன்
நின்றிருக்கிறாள்
ஓர் இளம் பெண்
மண் அகலை பீடத்தில் வைத்து
முதலில் எண்ணெயிட்டு
திரியை அதில் நனைத்து
பின் அகல் வாயில் திரி பொருத்தி
மென் விரல்களால் தீக்குச்சி உரசி
தீபம் ஏற்றுகிறாள்
ஒரு தீபம் சுடர்கிறது
அப்போது முளைத்திருக்கும் சந்தோஷத்தில்
ஓர் இனிய ஆர்வத்தில்
வீசும் காற்றுக்கு வேகமாய் அசைந்து கொண்டு
தீபச் சுடர் காண்கிறாள்
கண் மூடி பிராத்திக்கிறாள்
குடும்பத்துக்காக
தனக்காக
அவள் வணங்கிச் சென்ற பின்
அவள் ஏற்றிய சுடரை
காண்கிறார்
விநாயகர்
உலகில் எங்கெங்கோ சுடர்ந்து கொண்டிருக்கும்
அகல்களில் மீண்டும் ஒன்று
யுகயுகமாய் காட்டப்படும் பிரியங்களில்
அடுத்த ஒன்று
என்று நினைத்தவாறு
மூஷிதத்தைப் பார்க்கிறார்
ஐயன் மகிழ்ந்தது கண்டு
தானும் மகிழ்கிறது
மூஷித வாகனம்
நின்றிருக்கிறாள்
ஓர் இளம் பெண்
மண் அகலை பீடத்தில் வைத்து
முதலில் எண்ணெயிட்டு
திரியை அதில் நனைத்து
பின் அகல் வாயில் திரி பொருத்தி
மென் விரல்களால் தீக்குச்சி உரசி
தீபம் ஏற்றுகிறாள்
ஒரு தீபம் சுடர்கிறது
அப்போது முளைத்திருக்கும் சந்தோஷத்தில்
ஓர் இனிய ஆர்வத்தில்
வீசும் காற்றுக்கு வேகமாய் அசைந்து கொண்டு
தீபச் சுடர் காண்கிறாள்
கண் மூடி பிராத்திக்கிறாள்
குடும்பத்துக்காக
தனக்காக
அவள் வணங்கிச் சென்ற பின்
அவள் ஏற்றிய சுடரை
காண்கிறார்
விநாயகர்
உலகில் எங்கெங்கோ சுடர்ந்து கொண்டிருக்கும்
அகல்களில் மீண்டும் ஒன்று
யுகயுகமாய் காட்டப்படும் பிரியங்களில்
அடுத்த ஒன்று
என்று நினைத்தவாறு
மூஷிதத்தைப் பார்க்கிறார்
ஐயன் மகிழ்ந்தது கண்டு
தானும் மகிழ்கிறது
மூஷித வாகனம்