Saturday, 14 September 2019

ஆசான்

நீ அமர்ந்திருக்கிறாய்
மௌனமாய்
உன் கருணை நம்பிக்கையளிக்கிறது
ஞானத்துக்காக நடந்தன நின் பாதங்கள்
அளவின்றி
நின் பாதம் பணிகிறேன்
வெற்று அகங்காரம் மட்டுமே இருக்கிறது
அதை உன் முன் விட்டுத் தொலையும் வழியும் அறிகிலேன்
என் காணிக்கையாகக் கண்ணீரைக் கொடுக்கிறேன்
நின் கருணை என்னை எப்போதும் நல்வழிப்படுத்தட்டும்
நின் கருணையே
என் நம்பிக்கையாய் எஞ்சுகிறது
நின் கருணையே
என் நாளின் சூரியனாகிறது
என் இறைவா
மீண்டும்
மீண்டும்
நின் அடிபணிகிறேன்
நின் அடிபணிகிறேன்

புத்தம் சரணம் கச்சாமி