Sunday, 15 September 2019

பாதை

நின் சொற்களை செவியுறுகிறேன்
ஒவ்வொரு அடியிலும் மிகுகின்றன
வலியின் அதிர்வுகள்
அகங்காரத்தின் வலி
இறைவா
என்னை அழித்து விடு
என்னை அழித்து விடு
நின் கருணையின் ஒரு துளி
என் மனத்தில்
ஒரு விதையாய் விழட்டும்
முளைக்கும் அப்பசுமையை
உயிர் கொண்டு காப்பேன்
உன் அருள் ஒளியை
அகமெங்கும்
ஏந்தி
காலக்கடலை
கடந்து சென்றிடுவேன்
என் இறைவனே

புத்தம் சரணம் கச்சாமி