நின் சொற்களை செவியுறுகிறேன்
ஒவ்வொரு அடியிலும் மிகுகின்றன
வலியின் அதிர்வுகள்
அகங்காரத்தின் வலி
இறைவா
என்னை அழித்து விடு
என்னை அழித்து விடு
நின் கருணையின் ஒரு துளி
என் மனத்தில்
ஒரு விதையாய் விழட்டும்
முளைக்கும் அப்பசுமையை
உயிர் கொண்டு காப்பேன்
உன் அருள் ஒளியை
அகமெங்கும்
ஏந்தி
காலக்கடலை
கடந்து சென்றிடுவேன்
என் இறைவனே
புத்தம் சரணம் கச்சாமி
ஒவ்வொரு அடியிலும் மிகுகின்றன
வலியின் அதிர்வுகள்
அகங்காரத்தின் வலி
இறைவா
என்னை அழித்து விடு
என்னை அழித்து விடு
நின் கருணையின் ஒரு துளி
என் மனத்தில்
ஒரு விதையாய் விழட்டும்
முளைக்கும் அப்பசுமையை
உயிர் கொண்டு காப்பேன்
உன் அருள் ஒளியை
அகமெங்கும்
ஏந்தி
காலக்கடலை
கடந்து சென்றிடுவேன்
என் இறைவனே
புத்தம் சரணம் கச்சாமி