கண் காணும் பாதைகள் கொண்ட
வானம்
பயணிகள் யாருமின்றி
தனித்திருக்கிறது
துணையற்ற மனம்
நெடுநேரமாய் பார்த்துக் கொண்டேயிருக்கிறது
அப்போது
யாரும் பயணிக்காத வானத்தை
ஒரு மழலை விண்மீன்
சிரித்துக் கொண்டே
உன் அருகில் வரட்டுமா
என்றது
விண் சுடரை ஏந்திக் கொள்வதை
யோசித்திருந்த பொழுதில்
ஞாபகம் வந்து
தன் அன்னையிடம் ஓடிச் சென்றது
மழலை விண்மீன்
கண் காணும்
விண்மீனை சமாதானம் செய்ய
நெடுந்தொலைவு
செல்ல வேண்டியிருக்கிறது
முடிவேயில்லாமல்
வானம்
பயணிகள் யாருமின்றி
தனித்திருக்கிறது
துணையற்ற மனம்
நெடுநேரமாய் பார்த்துக் கொண்டேயிருக்கிறது
அப்போது
யாரும் பயணிக்காத வானத்தை
ஒரு மழலை விண்மீன்
சிரித்துக் கொண்டே
உன் அருகில் வரட்டுமா
என்றது
விண் சுடரை ஏந்திக் கொள்வதை
யோசித்திருந்த பொழுதில்
ஞாபகம் வந்து
தன் அன்னையிடம் ஓடிச் சென்றது
மழலை விண்மீன்
கண் காணும்
விண்மீனை சமாதானம் செய்ய
நெடுந்தொலைவு
செல்ல வேண்டியிருக்கிறது
முடிவேயில்லாமல்