Tuesday, 17 September 2019

மறுமொழி

கண் காணும் பாதைகள் கொண்ட
வானம்
பயணிகள் யாருமின்றி
தனித்திருக்கிறது
துணையற்ற மனம்
நெடுநேரமாய் பார்த்துக் கொண்டேயிருக்கிறது
அப்போது
யாரும் பயணிக்காத வானத்தை
ஒரு மழலை விண்மீன்
சிரித்துக் கொண்டே
உன் அருகில் வரட்டுமா
என்றது
விண் சுடரை ஏந்திக் கொள்வதை
யோசித்திருந்த பொழுதில்
ஞாபகம் வந்து
தன் அன்னையிடம் ஓடிச் சென்றது
மழலை விண்மீன்
கண் காணும்
விண்மீனை சமாதானம் செய்ய
நெடுந்தொலைவு
செல்ல வேண்டியிருக்கிறது
முடிவேயில்லாமல்