Monday 16 September 2019

இறுதிச் சுற்று - வாசிப்பு மாரத்தான்

வாசிப்பு மாரத்தானில் இன்று நாற்பத்து ஆறாம் நாள். என்னுடைய மொத்த வாசிப்பு 91 மணி நேரம். இலக்கை அடைய இன்னும் 9 மணி நேரம் வாசிக்க வேண்டும். இரண்டு நாட்கள் இருக்கின்றன. வாசித்து விடலாம். இன்று சுப்பு ரெட்டியாரின் ‘’நினைவுக் குமிழிகள்’’ நூலை (1500 பக்கம்) (4 பாகம்) வாசித்து முடித்தேன். நாளை அவருடைய பயண நூலை வாசிக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளேன்.