தளர்ந்திடும் போதெல்லாம்
நம்பிக்கையான சொற்கள்
உரைப்பாய்
நம்பிக்கையால்
மட்டுமே நிறைந்திருக்கிறாய்
மனிதத் துயரங்கள்
முன்
உன் அகம்
ஒரு துளி
கண்ணீரை முன்னிறுத்தியது
தீபங்கள் முன்
ஒளிரும்
உன் சுடர்முகம்
கற்கள் மேகமென
எழுகின்றன
வான் நோக்கி
மாலை அந்திக்குப்
பின் இரவு
இரவுக்குப் பின்
ஒவ்வொரு நாளும்
காலை அந்தி வரும்
தானே?