Thursday 24 October 2019


தளர்ந்திடும் போதெல்லாம்
நம்பிக்கையான சொற்கள்
உரைப்பாய்
நம்பிக்கையால் மட்டுமே நிறைந்திருக்கிறாய்
மனிதத் துயரங்கள்
முன்
உன் அகம்
ஒரு துளி
கண்ணீரை முன்னிறுத்தியது
தீபங்கள் முன்
ஒளிரும்
உன் சுடர்முகம்
கற்கள் மேகமென
எழுகின்றன
வான் நோக்கி
மாலை அந்திக்குப் பின் இரவு
இரவுக்குப் பின்
ஒவ்வொரு நாளும்
காலை அந்தி வரும் தானே?