தலை சாய்த்து
மெல்ல கவனம் குவித்து
சில கணங்கள்
இமைக்காது
நோக்கி
நீ
செய்யும் சிறுசெயல்கள்
முதலில்
அவசரமாய்
கண்களில் உருவாகிவிடும்
உன் புன்னகைகள்
பிரதிபலிக்கும்
உன்னைச் சூழ்ந்திருக்கும்
உன் சூழல்
உன் எளிய சொற்கள்
உன் எளிய யோசனைகள்
இந்த உலகம்
உன் கண்மணிக்குள்
அமைதி
கொண்டிருக்கிறதா
என் கண்ணே