Monday 4 November 2019

ஆழமும் உயரமும் - 3


தலைச்சங்க நாண்மதியம்

நாங்கூர் திவ்ய தேசங்களுக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் அமைந்துள்ள தளம். பூம்புகார் வணிகத்தில் உச்சத்தில் இருந்த போது சங்கு விற்பனை இங்கே பிரதானமாக இருந்ததால் தலைச்சங்கம் என பெயர் பெற்றது என்கிறார் தமிழறிஞர் சுப்பு ரெட்டியார். வெண்சுடர் பெருமாள் நின்ற கோலம்.

கங்கை கொண்ட சோழபுரம்

சோழப் பேரரசு தன் பெரும் உயர்வுகளை நோக்கி வளரத் துவங்கிய காலகட்டத்தில் எழுப்பப்பட்ட ஆலயம். தமிழ்நாட்டின் சிற்பக் கலையின் மகத்தான உச்சங்களில் ஒன்று. யுனெஸ்கோவால் உலக பாரம்பர்ய சின்னமாக அறிவிக்கப்பட்ட தலம்.

தாராசுரம்

சிறு சிற்பத்திலிருந்து ஒட்டு மொத்த ஆலயமும் முழுமை கொண்டுள்ள ஆலயம். யுனெஸ்கோ பட்டியலில் உள்ள தலம்.

திருபுவனம்

தேர் வடிவில் வடிவமைக்கப்பட்ட ஆலயத்தினை உடையது. சிற்பங்களுக்குப் பெயர் போனது.