மாலை வானின் முதல்
விண்மீன்
ஒளிரத் துவங்கும்
கணத்தில்
உன் பாதங்கள்
மண் தொடுகின்றன
வான் பார்க்கிறாய்
வலசைப் பறவைகளை
அந்தி அமைதியை
குளிர்ப் பொழுதை
சிற்றகலின் சுடர்
மின்னுகிறது
கருவறைத் தெய்வத்தின்
முகத்தில்
காற்றில் கரையும்
மணியோசை
இரவு என்பது எவ்வளவு
நீண்டது
பிரிவைப் போல
நட்சத்திரங்கள்
துணையிருக்கும் வெளியில்
உனது மௌனம்
நுண்மை கொள்கிறது
உயிரென