Sunday 22 December 2019


மாலை வானின் முதல் விண்மீன்
ஒளிரத் துவங்கும் கணத்தில்
உன் பாதங்கள்
மண் தொடுகின்றன
வான் பார்க்கிறாய்
வலசைப் பறவைகளை
அந்தி அமைதியை
குளிர்ப் பொழுதை
சிற்றகலின் சுடர் மின்னுகிறது
கருவறைத் தெய்வத்தின் முகத்தில்
காற்றில் கரையும் மணியோசை
இரவு என்பது எவ்வளவு நீண்டது
பிரிவைப் போல
நட்சத்திரங்கள் துணையிருக்கும் வெளியில்
உனது மௌனம்
நுண்மை கொள்கிறது
உயிரென