Monday 23 December 2019

மௌனங்களுடன்
துல்லியமான அமைதியுடன்
பனி பொழிந்து கொண்டிருக்கிறது

துவக்க ஆயத்தங்களை
மேற்கொள்கின்றன
வெளிச்சத்தின் ரேகைகள்

ஒரு புதிய புலரியில்
ஒரு புதிய பகலில்
ஒரு புதிய நாளில்
கிரீச்சிட்டுக் கொண்டிருக்கின்றன
புள்ளினங்கள்

நம்பிக்கையின் பிராத்தனைகள்
ஒலிக்கத்
தொடங்குகின்றன

உயிரை
மலரச் செய்யும்
கனிகளை
மேலும்
இனிமை கொள்ளச் செய்யும்
தானிய மணிகளை
முற்றச் செய்யும்
விதைச்சொல்லை
உச்சரித்தவாறு
சாலையில் நடக்கும்
இந்த ஒற்றைப்பயணி யார்
எங்கிருந்து வருகிறான்
எங்கே செல்கிறான்