Thursday 19 March 2020

வாசிப்புப் பயிற்சி

சில மாதங்களுக்கு முன், வாசிப்பு மாரத்தானில் 40 நாட்களில் 100 மணி நேரத்துக்கு மேல் வாசித்தேன். சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டரை மணி நேர வாசிப்பு. எளிய இலக்குதான். ஆனாலும் ஒரு நாள் கூட விடுபடாமல் வாசிக்க வேண்டும் என்பது விதி. ஒரு நாளும் விடுபடவில்லை. இன்று ஒரு பயிற்சிக்காக 10 நாட்களில் 100 மணி நேர வாசிப்பை மேற்கொள்ளலாம் என்று தோன்றியது. புத்தகங்களுடன் சொற்களுடன் மேலும் நெருக்கமாக இருக்க ஒரு வாய்ப்பு. அடுத்த பத்து நாட்கள் எங்கும் வெளியூர் செல்லப்போவதில்லை. மாலைத் தென்றல் மகிழச் செய்யும் வசந்த காலம் தேசமெங்கும் தொடங்குகிறது. ஆர்வம் கொண்டு என் இளம் வயதில் புத்தகங்கள் வாசித்த நாட்களே எனது வாழ்வின் வசந்த காலமாக இருந்திருக்கிறது. எண்ணத்தில் இனிமை நிறைந்திருக்குமாயின் எல்லா காலங்களும் வசந்தமே!