Tuesday 14 April 2020

வாழ்வின் வசந்தம்

புதுத் தளிர்கள் துளிர்க்கும் மலர்கள் மலரும் தாவரங்களில் கனிகள் கனியும் வசந்த காலம் மெல்ல சூழ்கிறது. கோடை உச்சம் பெற்றிருக்கும் காலங்களில் நான் அதிகம் அலைந்து திரிந்திருக்கிறேன். பகலெல்லாம் வெயிலை உடலில் ஏந்தி வியர்வைச் சுரப்பிகள் வற்றிப் போய் தோலின் உப்பு அதன் மேற்பரப்பில் வறண்டு ஒட்டிக் கொண்டிருக்கும் போது அனல்காற்றில் நான் பெரும்பாலும் பயணித்திருக்கிறேன். கோடையின் பகல்பொழுது விடை பெற்று அந்திக்குப் பின் தெற்கிலிருந்து வரும் தென்றல் உடலைத் தீண்டும் போது உணரும் இனிமைக்காக இன்னும் எத்தனை கோடையிலும் அலையலாம். உடலைத் தீண்டும் தென்றல் இளைப்பாற்றுகிறது. நம்பிக்கை அளிக்கிறது. தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கான உத்வேகம் அளிக்கிறது. 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!