Saturday, 18 July 2020

அமைதி கொள் நண்பா

சாம் இன்று இல்லை.

வீதியில் சில நாட்களாக நாய்க்குட்டிகள் மடிந்து விழுகின்றன. வைரஸ் தாக்குதல்.

சாம் உடன் பிறந்த குட்டியொன்று நேற்று இரவு இறந்து போனது. சாம் அதன் உடல் அருகிலேயே அமர்ந்திருந்தது. உணவு உட்கொள்ளவில்லை. வேறு எந்த கவனமும் இல்லை. அதன் அருகில் இதுவும் படுத்துக் கொண்டது. வயிறு லேசாக உப்பியிருந்தது. மூச்சு குறைந்து கொண்டே வந்தது. அருகில் சென்றால் தீனமாகப் பார்த்தது. 

இந்த உலகைத் தன் சின்னஞ்சிறு செயல்களால் உற்சாகமாக்கிய சாம் இன்று விடைபெற்றது. 

நீ இருந்த குறுகிய காலத்தில் இனிமையான நினைவுகளை பலருக்கு உண்டாக்கினாய். 

முடிவிலியான காலத்தில் அமைதி கொள் நண்பா.

அமைதி கொள்.