Sunday 19 July 2020

காவிரி முழுக்கு

இன்று மதியம் நண்பர் ஃபோன் செய்தார். ஆற்றில் நீராடுவோம் என அழைத்தார். காவிரியில் நிரம்ப தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு நீர் மிகை. காவிரியில் முழுகினோம். இந்த வாரம் மரக்கன்றுகள் நடுவதால் இந்த முழுக்கு காவிரியின் ஆசி கோரிய ஒன்று. நதியும் மரமும் ஒளியும் வானும்  இறைமையின் கண் கண்ட வடிவங்கள். இவற்றில் உறையும் இறையைக் கண்டது நம் மரபு. இயற்கையுடன் உணர்வுபூர்வமான தொடர்பை உருவாக்கிக் கொள்ளுதலே ஒட்டு மொத்த மானுடமும் சென்று சேர வேண்டிய இடம். அந்த உணர்வை பல்லாயிரம் ஆண்டுகளாக பல தலைமுறைகளாக பேணிக் காத்து நம் கையில் அளித்திருக்கின்றனர் நம் முன்னோர்.