Saturday 8 August 2020

 அன்று பெய்த மழை

பெருக்கெடுக்கும் சிறுகால்கள்

குறுக்கிட்டுச் செல்லும்

மலைப்பாதையின் மேல்

மௌனத் தவம் 

புரிகின்றன

நீர் மேகங்கள்

பூத்திருக்கும் மரத்தை

பார்த்த வண்ணம்

இருக்கிறான்

தொலை தூரப் பிரயாணி