Thursday 6 August 2020

மழை

வானம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மேகங்கள் திரள்கின்றன. மழை பொழிந்தால் நலமாக இருக்கும். மரக்கன்றுகளின் ஒரு பகுதி மக்களைச் சென்றடைந்துள்ளது. அனைவரும் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் வயல் வரப்புகளில் நட்ட வண்ணம் இருக்கின்றனர். ஒரு கிராமம் முழுமையும் ஈடுபடும் செயல். ஒற்றுமை மகத்தான மனிதப் பண்பு. ஒரு நற்செயலுக்காக மனிதர்கள் ஒன்றுபடுவார்கள் எனில் அதில் நிகழும் கூறுகள் அளப்பறியவை. அற்புதமானவை. 

மண்ணின் உயிர்ச்சக்தி பயிராகிறது; கனியாகிறது; மலராகிறது; வாழ்வாகிறது. 

மண்ணிற்கும் விண்ணிற்கும் வணக்கம்.