Saturday, 12 September 2020

ஆசான் சொல்

 திருக்குறள் ஒரு கவிதை நூலும் கூட என்பது அதன் சிறப்புகளில் தலையாயது. கவிதை காலங்களை யுகங்களைக் கடந்தும் புதிதாக மலர்ந்திருக்கும் இந்த தருணத்துக்கானது என்று எண்ண வைக்கிறது. அறத்தின் குரல் ஒலிக்கும் ஆசானாக இருக்கும் போதே வாழ்வின் நுட்பமான தன்மையை எழுதும் கவிஞராகவும் இருக்கிறார் திருவள்ளுவர். கவிதையின் மீது மாளாக் காதல் கொண்ட வாசகனாக திருக்குறளை நான் அணுகும் விதத்தை ‘’ஆசான் சொல்’’ என்ற பெயரில் எழுதலாம் என இருக்கிறேன்.