Wednesday, 23 September 2020

 தீயென மேலெழுகிறாய் என்றேன்
அப்படியா என்றாய்
மழையென நிறைகிறாய் என்றேன்
அப்படியா என்றாய்
நிலமெனப் பொருத்துக் கொள்கிறாய் என்றேன்
அப்படியா என்றாய்
மென் காற்றின் இனிமை உன் இயல்பு என்றேன்
அப்படியா என்றாய்
நீ
எனக்கு வானம்
என்றேன்
நீ
ஒரு துளி கண்ணீர் சிந்தினாய்