Friday 23 October 2020

இந்த மழைத்துளிகள்
இலைகளைத் தொடுவது
போன்றதா
நம் முத்தங்கள்

காற்றில்
ஈரம் அடர்ந்திருக்கும்
காலை அந்தியின்
வண்ணங்கள்
நம் அன்பின்
நிறங்களா

மழை பெய்த பின்
துளிர்க்கும்
தளிர்கள் எத்தனை
உன்னிடம் சொல்ல வேண்டியவை
கூடிக் கொண்டே போகின்றன

பேதம் இல்லாத இரவு
யாவையும்
பற்றிப் படர்கிறது
நம்மைப் போல