இந்த மழைத்துளிகள்
இலைகளைத் தொடுவது
போன்றதா
நம் முத்தங்கள்
காற்றில்
ஈரம் அடர்ந்திருக்கும்
காலை அந்தியின்
வண்ணங்கள்
நம் அன்பின்
நிறங்களா
மழை பெய்த பின்
துளிர்க்கும்
தளிர்கள் எத்தனை
உன்னிடம் சொல்ல வேண்டியவை
கூடிக் கொண்டே போகின்றன
பேதம் இல்லாத இரவு
யாவையும்
பற்றிப் படர்கிறது
நம்மைப் போல