Thursday, 29 October 2020

தமருகம்

உன் இசைக்கருவியின்
நரம்பொன்றை
மீட்டுகிறாய்
அதிர்வு எங்கும்
உன் குரல் 
இணைகிறது
பெருவெள்ளம்
கண்ணீர்
மழை
கடல்
மேகம்
நீர்மை
ஜீவன்களின் குருதி அத்தனை குளிர்ந்திருக்கிறது
உன் ஒலி 
மெல்ல 
முற்றும் கரைகையில்
நிலைபெறுகிறது
நிச்சலனம்
பனிவரையில்
ஒலிக்கத் தொடங்குகிறது
இறைமையின்
உடுக்கை