Wednesday 28 October 2020

சுயம்பு

வேர்கள் கொண்டிருக்கவில்லை
திசையெங்கும் கிளை பரப்பவில்லை
ஆற்றல் திரட்டி
துளி துளி யாய் மேலெழவில்லை
நீ
மலராக இருக்கிறாய்
கருணையின் மணம் பரப்புகிறாய்
கடவுளைப் போல