Sunday, 11 October 2020

கடவுளின் உலகம்

 நேராக
விருட்சத்தைப் போல
அமர்ந்திருக்கிறாய்

பாடுகையில்
உன்னிலிருந்து
வெளி எங்கும்
சிதறிப் பறக்கின்றன
ஆயிரம் புள்ளினங்கள்

உன் இசை நிறையும்
அகங்களில்
மலர்கின்றன
நூறு நூறு மலர்கள்

பொழியத் தொடங்குகிறது
அமிர்தத்தின்
மழைத்துளிகள்

நீ பாடுகையில்
உருவாகும் 
உலகம்
கடவுளின் உலகமாக
இருப்பது
எப்படி