நேராக
விருட்சத்தைப் போல
அமர்ந்திருக்கிறாய்
பாடுகையில்
உன்னிலிருந்து
வெளி எங்கும்
சிதறிப் பறக்கின்றன
ஆயிரம் புள்ளினங்கள்
உன் இசை நிறையும்
அகங்களில்
மலர்கின்றன
நூறு நூறு மலர்கள்
பொழியத் தொடங்குகிறது
அமிர்தத்தின்
மழைத்துளிகள்
நீ பாடுகையில்
உருவாகும்
உலகம்
கடவுளின் உலகமாக
இருப்பது
எப்படி