உன் இசையில்
மெல்லப் பாய்கின்றன நீரோடைகள்
இரவின் அடர்த்தி கொண்ட
குளிர் அருவி கொட்டிக் கொண்டிருக்கிறது
மண் வாசனை எழுப்பும் தூறல்
மட்பாண்ட நீரின் குளிர்ச்சி
மோனித்திருக்கும்
இந்த பாறைக்குத் தான்
எத்தனை
வழவழப்பு
நீர்மை என்பது என்ன கண்ணே
நெருங்கினால் குளிரும் தீ யா?