Wednesday 25 November 2020

மழை மலர்


அப் பொழுதில் மலர்ந்த மலர்கள்
தடாகத்தில்
சற்று முன் பூத்த பூக்களிடம்
கேட்டன
‘நண்பர்களே! நண்பர்களே!
மழை நிறைக்கும் இந்நாளில்
சாலையில்
ஏன்
மனிதர்கள் இல்லை?’
‘அவர்கள் இல்லங்களில் இருக்கிறார்கள்’
‘இல்லங்களில் இருந்து மழையைப் பார்ப்பார்களா?’
பூக்கள் மௌனித்திருந்தன
‘’வானும் மழையும் நீரும் இனிதல்லவா?’’
பூக்கள் ஆம் என்றன.