இறைவா
கருணைப் பார்வைகளே
அன்பின் சொற்களே
மாசற்ற ஸ்பரிசங்களே
பிறருக்காக
முடிவற்ற பாதைகளை
நடந்து கடந்த பாதங்களே
உங்கள் முன்
ஈசல் ஒன்று துடிக்கிறது
சிறு எறும்பு
தன் புற்றுக்குள் செல்கிறது
தன் உணவைச் சுமந்தவாறு
முகம் பார்க்கக் காத்திருக்கிறது
வாசலின் நாய்
பல கோடி நூறு
தீபப் பிரகாசத்துடன்
ஒளிரத் தொடங்குகிறது
நாளின்
சூரியன்