அன்பே
இந்த மழை பொழிந்து கொண்டிருக்கும்
இந்த பொழுதில்
காற்றின் நீர்மை சூழ்கிறது
உளமெங்கும்
புறமெங்கும்
ஒரு மழைத்துளியைப் போல சிதறி
நிலத்தைப் போல அமைதி காத்து
சிறு ஓடையென பெருகி ஓடி
மழை ஓய்ந்து உருவாகும் மௌனத்தில்
நிலை பெறுகிறது
உயிர்
வாழ்வு
உனது நினைவுகள்