Saturday, 30 January 2021
அறிவார் தொழில்
Monday, 18 January 2021
இராமன் தேர் ஏறு படலம்
9825. மாதலி கொணர்ந்தனன் மகோததி வளாவும்
பூதலம் எழுந்துபடர் தன்மைய பொலந்தேர்;
சீத மதிமண்டலமும் ஏனை உளவும் திண்
பாதம் எனநின்றது பரந்தது விசும்பின்.
பொன்னைப் போல் ஒளி விடும் தேரை மாதலி
ஸ்ரீராமனுக்காக ஓட்டி வந்தான்.
9833. வந்ததனை வானவர்
வணங்கி, ‘வலியோய்! நீ
எந்தை தர வந்தனை;
எமக்கு உதவுகிற்பாய்;
தந்தருள்வை வென்றி ‘என
நின்று, தகை மென் பூச்
சிந்தினர்கள்; மாதலி
கடாவி நனி சென்றான்.
‘’இந்திரனின் சார்பில்
உன்னை அனுப்புகிறோம். தேவர்கள் மகிழ்வடையும் விதமாக உனது சேவை அமைய வேண்டும்’’
என்று கூறி மாதலியை களத்திற்கு அனுப்பி வைத்தனர்.
9834. ‘வினைப்பகை விசைக்கொடு
விசும்பு உருவி, மான
மனத்தின் விசைபெற்றுளது
வந்தது ‘என வானோடு
அனைத்து உலகமும் தொழ,
அடைந்தது, அமலன்பால்;
நினைப்பும் இடை பின் பட
நிமிர்ந்து உயர் நெடுந்தேர்.
மாதலி பாகனாய் இருந்த தேர் ஸ்ரீராமனை அடைந்தது.
9835. ‘அலரி தனி ஆழி புனை
தேர் இது எனின், அன்றால்;
உலகின் முடிவில் பெரிய
ஊழ் ஒளி இது அன்றால்;
நிலைகொள் நெடு மேரு கிரி
அன்று; நெடிது அம்மா!
தலைவர் ஒரு மூவர் தனி
மானம் இது தானோ?
எல்லா விதத்திலும் உயர்வானது அத்தேர்.
9836. ‘என்னை இது நம்மை இடை
எய்தல்? ‘என எண்ணா,
மன்னவர்தம் மன்னன்மகன்,
மாதலியை, ‘வந்தாய்,
பொன்னின் ஒளிர்தேர் இதுகொடு,
ஆர்புகல? ‘என்றான்;
அன்னவனும் அன்னதனை
ஆக உரை செய்தான்.
இராவணனுக்கு எதிரான யுத்தத்தில் வானர சேனைக்கு
உதவிடும் விதமாக இந்த தேரை அனுப்ப உத்தரவிட்டது யார் என மாதலியிடம் ஸ்ரீராமன்
கேட்டார்.
9837. ‘முப்புரம் எரித்தவனும்,
நான்முகனும், முன்நாள்
அப்பகல் இயற்றி உளது;
ஆயிரம் அருக்கர்க்கு
ஒப்பு உடையது; ஊழி திரி
காலும் உலைவு இல்லா
இப்பொரு இல் தேர் வருவது
இந்திரனது எந்தாய்!
அமரர் தலைவனான இந்திரனின் கட்டளைப்படி வந்துள்ளதாக
மாதலி கூறினான்.
9842. ஐயன் இதுகேட்டு, ‘இகல்
அரக்கர் அகல் மாயச்
செய்கை கொல்? ‘எனச் சிறிது
சிந்தையில் நினைந்தான்;
‘மெய் அவன் உரைத்தது ‘என
வேண்டி, இடை பூண்ட
மொய் உளை வயப்பரி
மொழிந்த, முது வேதம்.
’இது அரக்கர்களின் மாயமாக இருக்குமோ என ஸ்ரீராமன்
சிந்தித்ததை அறிந்த தேரின் புரவிகள் வேத கோஷம் செய்தன.
9843. ‘இல்லை இனி ஐயம் ‘என
எண்ணிய இராமன்,
நல்லவனை, ‘நீ உனது
நாமம் நவில்க! ‘என்ன,
‘வல் இதனை ஊர்வது ஒரு
மாதலி எனப்பேர்
சொல்லுவர் ‘எனத் தொழுது,
நெஞ்சினொடு சொன்னான்.
ஐயம் நீங்கிய ஸ்ரீராமனின் மாதலியிடம் அவன் நாமம்
என்ன என்று கேட்டான்.
9844. மாருதியை நோக்கி, இள
வாள் அரியை நோக்கி,
‘நீர் கருதுகின்றதை
நிகழ்த்தும் ‘என, நின்றான்
ஆரியன்; வணங்கி அவர்,
‘ஐயம் இலை, ஐயா!
தேர் இது புரந்தரனது ‘
என்றனர், தெளிந்தார்.
அனுமனும் இலக்குவனும் இது இந்திரனின் தேர் என
உறுதிப்படுத்தினர்.
9845. விழுந்து புரள் தீவினை
குலத்தோடும் வெதும்ப,
தொழும் தகைய நல்வினை
களிப்பினொடு துள்ள,
அழுந்து துயரத்து அமரர்
அந்தணர் கைமுந்துற்று
எழுந்து தலை ஏற, இனிது
ஏறினன் இராமன்.
இராவணன் தேர் ஏறு படலம்
ஏழ் இரு நூறு கோடி
கொற்ற வாள் நிருதர் சேனை
குழீஇயது; கொடித்திண் தேரும்
சுற்றுறு துளைக் கைம்மாவும்,
துரகமும், பிறவும் தொக்க;
வற்றிய வேலை என்ன
இலங்கை ஊர் வறளிற்று ஆக.
ஒருவனை, இருமைக்கு ஏற்ற
பூசனை முறையின் செய்து,
திருமறை புகன்ற தானம்
வீசினன் இயற்றி, மற்றும்
வேட்டன வேட்டோர்க்கு எல்லாம்
ஆசு அற நல்கி, ஒல்காப்
போர்த்தொழிற்கு அமைவது ஆனான்
ஆயிரம் அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம்
என ஒளிர,
கருவி நான்முகன் வேள்வியில்
படைத்ததும், கட்டிச்
செருவில் இந்திரன் தந்த
பொன்கவசமும், சேர்த்தான்.
வையமும் வானும்
உரக தேயமும் ஒருங்கு உடன்
இவரினும், உச்சிச்
சொருகு பூ அன்ன சுமையது;
துரகம் இன்று எனினும்,
நிருதர் கோமகன் நினைந்துழிச்
செல்வது, ஓர் இமைப்பில்.
தனது தேரை ஒருங்கமைக்க ஆணையிட்டான்.
9803. பாரில் செல்வது, விசும்பிடைப்
படர்வது, பரந்த
நீரில் செல்வது, நெருப்பினும்
செல்வது, நிமிர்ந்த
போரில் செல்வது, பொன் நெடு
முகட்டிடை விரிஞ்சன்
ஊரில் செல்வது, எவ் உலகத்தும்
செல்வது, ஓர் இமைப்பின்.
முதலிய இமையோர்
தேறினார்களும் தியங்கினார்,
மயங்கினார், திகைத்தார்;
வேறு நாம் சொலும் வினை இலை,
மெய்யின் ஐம்புலனும்
ஆறினார்களும் அஞ்சினார்,
உலகு எலாம் அனுங்க.
மலர்க் கையால் வயிறு
கொன்று, அலந்தலைக் கொடு நெடுந்
துயரிடைக் குளித்தல்;
அன்று இது என்றிடின், மயன்மகள்
அத்தொழில் உறுதல்;
இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென்,
தலைப்படின் ‘என்றான்.
இலங்கலின் பல் தோள்
அலகு அளந்து அறியா நெடும்
படைகேளாடு அலங்க,
விலகு அளம் தரு கடல் திரை
விசும்பொடும் விம்ம,
உலகு அளந்தவன் வளர்ந்தனன்
ஆம் என உயர்ந்தான்.
9817. கடல்கள் யாவையும், கன மலைக்
குலங்களும், காரும்,
திடல்கொள் மேருவும், விசும்பிடைச்
செல்வன சிவண,
அடல்கொள் சேனையும், அரக்கனும்,
தேரும், வந்து ஆர்க்கும்
கடல் கொள் பேர் ஒலிக் கம்பலை
என்பதுங் கண்டார்.
இராக்கதத் தானை
கொழுந்து முந்த வந்து உற்றது;
கொற்றவ! குலுங்குற்று
அழுந்துகின்றது, நம் பலம்!
அமரரும் அஞ்சி,
விழுந்து சிந்தினர் ‘என்றனன்,
வீடணன், விரைவான்.
மெய்ம் முறை துளங்கி,
விழுந்து கவி சேனை இடு
பூசல் மிக, விண்ணோர்
அழுந்து படு பால் அமளி
‘அஞ்சல் ‘என அந்நாள்,
எழுந்தபடியே கடிது
எழுந்தனன், இராமன்.
கண்ணன், ஒரு காலன்
விடக் கயிறு எனப் பிறழும்
வாள் வலன் விசித்தான்,
‘மடக்கொடி துயர்க்கும், நெடு
வானின் உறைவோர் தம்
இடர்க் கடலினுக்கும் முடிவு,
இன்று ‘என இசைத்தான்.
முற்றும்; இனி, வெற்றி
ஆண்தகையது; உண்மை; இனி
அச்சம் அகல்வுற்றீர்,
பூண்ட மணி ஆழி வய
மா நிமிர் பொலந்தேர்
ஈண்ட விடுவீர் அமரர்! ‘
என்று அரன் இசைத்தான்.
செயற்கு உரியது ‘என்றார்;
ஏவல் புரி இந்திரனும்
அத் தொழில் இசைந்தான்,
‘மூவுலகும் இன்று ஒரு
கணத்தின் முறை முற்றிக்
காவல்புரி தன் பொரு
தேர் கொணர்தி ‘என்றான்.