Sunday, 28 February 2021

மீட்சிப் படலம் - 2

 

10156.   கற்பினுக்கு அரசினை பெண்மைக் காப்பினை

பொற்பினுக்கு அழகினை புகழின் வாழ்க்கையை

தன் பிரிந்து அருள்புரி தருமம் போலியை

அற்பின் அத்தலைவனும் அமைய நோக்கினான்.

 

 

 

10174.   இளையவன் தனை அழைத்து ‘இடுதி தீ ‘என

வளை ஒலி முன்கையாள் வாயின் கூறினாள்;

உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்

களைகணைத் தொழ அவன் கண்ணின் கூறினான்.

 

 

10175.   ஏங்கிய பொருமலின் இழி கண்ணீரினன்

வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும்

ஆங்கு எரி விதிமுறை அமைவித்தான்அதன்

பாங்குற நடந்தனள் பதுமப் போதினாள்.

 

 

10180.   கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை,

மனத்தினால்வாக்கினால்மறு உற்றேன் எனின்,

சினத்தினால் சுடுதியால், ‘தீச்செல்வா! ‘என்றாள்;

புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள்.

 

 

10181.   நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை

ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்

பாய்ந்தனள்பாய்தலும் பாலின் பஞ்சு எனத்

தீய்ந்தது அவ் எரி அவள் கற்பின் தீயினால்.